தொட்டியம் அரசு தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா
- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரச லூர் ஊராட்சி ஒன்றிய தொ டக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
- தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தை களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள், பேனா, புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர்.
தொட்டியம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரச லூர் ஊராட்சி ஒன்றிய தொ டக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
தொட்டியம் அருகேயுள்ள திருநாராயணபுரம் மற்றும் அரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தை கள் தின விழாவை முன்னிட்டு தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தை களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள், பேனா, புத்தகங்கள் வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தொட்டியம் பசுமை மக்கள் இயக்கத்தினர் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பள்ளி குழந்தை கள் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்து வரும் குழந்தைகளை கண்டறிந்து வரும் ஆண்டில் நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் மற்றும் தொட்டி யம் பசுமை மக்கள் இயக்கத்தினர் தெரிவித்த னர்.