உள்ளூர் செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-05-19 13:25 IST   |   Update On 2023-05-19 13:25:00 IST
  • லால்குடி அருகே உள்ள தனியார் ஆலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆய்வு மேற்கொண்டார்
  • உரிமங்கள், போக்குவரத்து குறித்து நேரில் ஆய்வு

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காட்டூரில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது எத்தனால் ஆலையில் கொள்ளளவு, விற்பனை மற்றும் போக்குவரத்து, உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். மேலும் செயல்பாடுகள் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். உடன் தாசில்தார் சித்ரா, லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் கோத்தாரி நிறுவனத்தினர் இருந்தனர்.

Tags:    

Similar News