உள்ளூர் செய்திகள்

மாமனாரை தாக்கிய மருமகன்

Published On 2023-09-18 14:14 IST   |   Update On 2023-09-18 14:14:00 IST
  • மகளிடம் தகராறு தட்டி கேட்ட மாமனாரை தாக்கிய மருமகன் கைது செய்யப்பட்டார்
  • எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடவடிக்கை

திருச்சி,

திருச்சி சேதுராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 68 ) இவர் தனது மகளை திருச்சி இடங்களைப் பற்றி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சுதாகர் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதை அறிந்து மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் மருமகன் வீட்டுக்கு நியாயம் கேட்க வந்தார்.அப்போது ஆத்திரமடைந்த சுதாகர் மாமனாரை கெட்ட வார்த்தையால் தட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து ராமகிருஷ்ணன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுதாகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News