உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம்

Published On 2022-11-08 09:53 GMT   |   Update On 2022-11-08 09:53 GMT
  • புதுப்பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்
  • கணவர் வெளிநாட்டில் ேவலை பார்க்கிறார்

திருச்சி:

சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் பகுதியில் 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். சிறுகனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வர்ஷினி (வயது19). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பின்னர் வேலை நிமித்தமாக பெரியசாமி அரபு நாட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாய் வீடு திரும்பிய வர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். அவர் சங்கர் என்ற வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வர்ஷினியின் தாய் வினோதினி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News