உள்ளூர் செய்திகள்
- கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்
- டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருச்சி,
சென்னை செங்கல்பட்டு மதுராந்தகம் பெரும்பாக்கம் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 44). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .
இந்த நிலையில் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் கிஷோர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.