உள்ளூர் செய்திகள்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை

Published On 2022-11-01 15:29 IST   |   Update On 2022-11-01 15:29:00 IST
  • கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்
  • தமிழக அரசுக்கு கோரிக்கை

திருச்சி:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் யு.ஜி.சி.தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலைக்கல்லூரிகளில் நிரந்தர உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததனால் சற்றேறக்குறைய 9000 உதவிப்பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட காலமாக (ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக) தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ வரிவுரையாளர்கள் 40 முதல் 50 வயதை கடந்தவர்களாகவும் மாதந்திர ஊதியமாக 20,000 பெற்று வரக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ள 4000 

Tags:    

Similar News