உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகே - மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் பலி

Published On 2023-11-25 06:24 GMT   |   Update On 2023-11-25 06:24 GMT
  • திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
  • இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் துறையூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்வதுடன், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 2 பசு மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியினை தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது. இதில் காயம் அடைந்த 3 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News