உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-11-01 09:01 GMT   |   Update On 2023-11-01 09:01 GMT
  • ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும்.
  • இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைவார்.

அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருள்வார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெறும். அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

Similar News