மார்க்கெட்டில் பணம் திருடிய நபர் கைது
- திருச்சி காந்தி மார்க்கெட்டில் பணம் திருடிய நபர் கைது
- புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி
திருச்சி மதுரை ரோடு கல்யாண சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் கீர்த்தி வாசன். இவர் வெல்லமண்டியில் ஒரு கடை முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதில் ஒரு பேக் வைத்திருந்தார். அந்த பேக்கில் 5000 ரூபாய் பணம் ,ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவை இருந்தது. அதை ஒருவர் திருடிவிட்டார். இது குறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் கீர்த்தி வாசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பீட்டர் வழக்கு பதிந்து, இந்த திருட்டு தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவரை கைது செய்தார் .
இதே போல் திருச்சி குமரன் நகர் பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டு கட்டுமான பணியில் இருந்த மோட்டாரை திருடியதாக மேல வண்ணார்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபரை புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.