உள்ளூர் செய்திகள்

மாதம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல்

Published On 2023-02-18 14:57 IST   |   Update On 2023-02-18 14:57:00 IST
  • மாதம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்
  • 3 பேர் மீது வழக்கு

திருச்சி:

திருச்சி அருகே நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் சமீபத்தில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதன் மேலாளராக ரமேஷ் என்பவர் பணிபரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது காரில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் மாதந்தோறும் ரூ. 10 லட்சம் மாமூல் வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் உன்னை தொலைத்து விடுவோம் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரமேஷ், திரையரங்க பங்குதாரர் டாக்டர் ஹரிஷ் குமாரிடம் தெரிவித்தார். உடனே அவர் இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாமூல் கேட்டு தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த நவலூர் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன், போஸ்கோ என்கிற வாண்டையார், மகேந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News