கஞ்சா பதுக்கிய ஐ.ஜே.கே. பிரமுகர் கைது
- திருச்சியில் கஞ்சா பதுக்கிய ஐ.ஜே.கே. பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- 1150 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
திருச்சி,
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் (வயது 53). இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்க னவே கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதான அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மீண்டும் கஞ்சா விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்- இன்ஸ்பெக்டர் வினோ த் மற்றும் போலீசார் கெம்ஸ் டவுன் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது குணா 1150 கிராம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.இதை அடுத்து போலீசார் குணசேகரனை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடை த்தனர். அவரிடமிருந்து ரூ. 850 ரொக்க பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா பதுக்கிய வழக்கில் ஐ ஜே கே பிரமுகர் கைது செய்ய ப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.