உள்ளூர் செய்திகள்

திருச்சியில் பட்டதாரி பெண் தற்கொலை

Published On 2022-10-21 15:31 IST   |   Update On 2022-10-21 15:31:00 IST
  • திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷோபா . இவரது மகள் ஜெயின் ரபேல் (வயது17).
  • ஷோபா தன்னுடைய மகள் ஜெயின் ரப்பேலை கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.

திருச்சி :

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷோபா . இவரது மகள் ஜெயின் ரபேல் (வயது17). திருச்சி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் படித்து வந்தார்.

இவர் கருமண்டபம் செல்வா நகர் பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபரை காதலித்தது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஷோபா தன்னுடைய மகள் ஜெயின் ரப்பேலை கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயின் ரபேல், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த செசன்ஸ் நீதிமன்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News