என் மலர்
நீங்கள் தேடியது "தற்கொலை. SUICIDE"
- திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷோபா . இவரது மகள் ஜெயின் ரபேல் (வயது17).
- ஷோபா தன்னுடைய மகள் ஜெயின் ரப்பேலை கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.
திருச்சி :
திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷோபா . இவரது மகள் ஜெயின் ரபேல் (வயது17). திருச்சி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் படித்து வந்தார்.
இவர் கருமண்டபம் செல்வா நகர் பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபரை காதலித்தது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஷோபா தன்னுடைய மகள் ஜெயின் ரப்பேலை கல்லூரிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயின் ரபேல், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த செசன்ஸ் நீதிமன்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதியரசன் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 43). இவரது இளைய மகன் புதியரசன் (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக புதியரசன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக்கு செல்லுமாறு அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த புதியரசன் கடந்த 23-ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட உறவினர்கள் புதியரசனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி புதியரசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






