உள்ளூர் செய்திகள்
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
- பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
- திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார்
திருச்சி
திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சம்பவத்தன்று இவர் தையல்காரர் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பஸ்சில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.