உள்ளூர் செய்திகள்

தொட்டியத்தில் - இளம் வாக்காளர்கள் விழிப்புணர்வு முகாம் - கலெக்டர் பிரதீப் குமார் பங்கேற்பு

Published On 2023-11-19 12:00 IST   |   Update On 2023-11-19 12:01:00 IST
  • இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
  • இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

தொட்டியம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி பெரியசாமி முசிறி கோட்டாட்சியர் ராஜன், மாவட்ட பழங்குடி யினர் நல அலுவலர் கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொங்குநாடு கல்லூரி முதல்வர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு இளம் வாக்கா ளர்களை அதிக அளவில் சேர்த்திடும் வகையில் இளம் வாக்கா ளர்களுக்கு விண்ணப்ப படிவத்தை வழங்கி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் தேர்தல் தனி துணை தாசில்தார் செல்வி, வரி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தொட்டியம் பகுதி கிராம நிர்வாக அலுவ லர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் தொட்டியம் தாசில்தார் கண்ணாமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News