திருச்சியில் மாணவனின் லேப்டாப்பை திருடிய 4 பேர் கைது
- கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21).
- அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப்பை திருடி சென்றனர்.
திருச்சி
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன்(வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து வருகிறார். மேலும் இவர் பொன்மலை அணுகு சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பத்தன்று மதியம் அபினன் அவருடைய அறையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அறைக்கு வந்து, அறையில் இருந்த 2 லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அபினன் கேகே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் பாலக்கரை பீமா நகர் பகுதியை சேர்ந்த கிருபாகரன்(21), பீமநகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பிரவீன்(24), செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சிமியோன்(21), மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.