உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து கொள்ளை

Published On 2023-05-30 09:40 GMT   |   Update On 2023-05-30 09:40 GMT
  • போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருகிறோம்.
  • போலீசார் 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோடு ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், சிசிடிவி காமிரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News