உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே போக்குவரத்து ஊழியர் தற்கொலை
- பணகுடி அருகே உள்ள ராஜகிருஷ்ணாபுரம் பாத்திமா ரோட்டை சேர்ந்தவர் பனிவாசகம்(வயது 67).
- சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த பனிவாசகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள ராஜகிருஷ்ணாபுரம் பாத்திமா ரோட்டை சேர்ந்தவர் பனிவாசகம்–(வயது 67). இவர் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.