உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2022-10-18 16:22 IST   |   Update On 2022-10-18 16:22:00 IST
  • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
  • இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.

அரவேணு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை மலை பயிர்கள் துறை அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அளியூர் கிராமத்தில் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஹீலாமோரி தலைமை தாங்கினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறங்காவலர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மகேஷ் மற்றும் ரமேஷ் சிறப்புரையாற்றினர். தோட்டக்கலை இயக்குனர் ஐஸ்வர்யா இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார். குமரகுரு இயற்கை வேளாண்மை குறித்தான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

Tags:    

Similar News