உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே டிராக்டர் பெட்டி திருட்டு

Published On 2022-09-16 14:00 IST   |   Update On 2022-09-16 14:00:00 IST
  • கடலூர் அருகே டிராக்டர் பெட்டி திருடப்பட்டது.
  • குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி கீழூரை சேர்ந்தவர் கயல் வேந்தன் (வயது 38). இவர் குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே தனக்கு சொந்தமான டிராக்டர் பெட்டியை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று தனது டிராக்டர் பெட்டியை கொண்டு வருவதற்கு செல்லும்போது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் பெட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கயல் வேந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News