உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் 13-ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு

Published On 2023-08-09 22:46 IST   |   Update On 2023-08-09 22:46:00 IST
  • தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

சென்னை:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ம் தேதி (நாளை) தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Tags:    

Similar News