உள்ளூர் செய்திகள்
புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்
- முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.
- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் முத்தூர் பேரூராட்சித்தலைவர் சுந்தராம்பாள் உள்ளனர்.