உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளியை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

Published On 2023-05-24 14:51 IST   |   Update On 2023-05-24 14:51:00 IST
  • போதைப் பொருள் விற்றது குறித்து போலீசாரிடம் தகவல் கூறியதால் முன் விரோதம்
  • பழிக்கு பழி வாங்க வெட்டியதாக வாக்குமூலம்

திருவண்ணாமலை:

வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மாற்றுத்திறனாளியான இவரை நேற்று முன்தினம் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டிவிட்டு தப்பினர்.

போதைப் பொருள் விற்றது குறித்து போலீசாரிடம் தகவல் கூறியதால் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து வரதனின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மகன்கள் அஜித் (வயது22), நாகமணி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அஜித்தை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதன், அவரது கூட்டாளிகள் விஜய் என்பவரை வெட்டி கொலை செய்ததாகவும் அதற்குப் பழிக்கு பழிவாங்க நான் வெட்டினேன் என்று அஜித் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News