உள்ளூர் செய்திகள்

மணல் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

Published On 2022-09-09 14:36 IST   |   Update On 2022-09-09 14:37:00 IST
  • டிரைவர் படுகாயம்
  • சாலையோரம் ஒதுங்கியதால் விபத்து

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள, செவரப்பூண்டி, கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 41) கூலி தொழிலாளி சரவணன், அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

வீடு கட்டுவதற்காக எம் சாண்ட் மணல் தேவைப்பட்டதால் சரவணன், பெரணமல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான குவாரிக்கு எம்சாண்ட் எடுத்துவருவதற்காக செவரப்பூண்டி, கிராமத்திற்கு டிரகட்ரில் சென்றார். அங்கிருந்து டிராக்டர் மூலம் எம்சாண்ட்டை ஏற்றி கொண்டு செவரப்பூண்டி, கிராமத்திற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

டிராக்டரைஅதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக், என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் செவரப்பூண்டி கிராமத்தின் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த ஆட்டோவிற்காக வழி விடுவதற்காக சாலையின் ஓரம் ஒதுங்கியது.

அப்போது நிலை தடுமாறி சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சரவணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார், டிரைவர் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கம் உள்ள உள்ளவர்கள் மீட்டு கார்த்திகை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News