உள்ளூர் செய்திகள்

மெக்கானிக்கிடம் செல்போன், பணம் பறிப்பு

Published On 2023-03-16 08:45 GMT   |   Update On 2023-03-16 08:45 GMT
  • 4 பேர் கும்பல் அட்டகாசம்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த ஒலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று அதிகாலை பஸ்சில் வந்தவாசிக்கு திரும்பினார்.

அதன்பின் வந்தவாசியிலிருந்து ஒலப்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல் பாதிரி இருளர் குடியிருப்பு அருகே சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை மடக்கியுள்ளனர்.

பின்னர் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.23 ஆயிரம், செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து மணிகண்டன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News