உள்ளூர் செய்திகள்

பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2023-03-12 14:30 IST   |   Update On 2023-03-12 14:30:00 IST
  • பைக்கில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கலசபாக்கம் அடுத்த கீழ்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ராஜா நேற்று போளூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் அப்போது கலசபாக்கம் அருகே கரையாம்பாடி பகுதியில் வரும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ் ராஜா மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News