உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஆசிட் குடித்து ஆசிரியை தற்கொலை

Published On 2022-06-20 08:57 GMT   |   Update On 2022-06-20 08:57 GMT
  • உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசிலா (வயது 65). இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3-வது மகன் குமரனுடன் தங்கி வசித்து வருகின்றனர். சுசிலாவிற்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அவர் உடலநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

சிறிது நேரம் கழித்து பாத்ரூம் சென்ற தாண்டவராயன், சுசிலா அங்கு மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News