உள்ளூர் செய்திகள்

தம்டகோடி மலையில் ரத உற்சவம்

Published On 2022-08-20 15:44 IST   |   Update On 2022-08-20 15:44:00 IST
  • மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் செந்தில்முருகன் கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

இதைமுன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும், உற்சவர் வள்ளி தெய்வா னை சமேத சுப்பிரமணிய சுவாமி அலங்காரம் நடைபெற்றது

கிருத்திகை ஏராளமான முருக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தம்டகோடி மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு தங்க ரத உற்சவம் நடைபெற்றது.

Tags:    

Similar News