உள்ளூர் செய்திகள்

நடப்பட்ட மரக்கன்றுகளை பாதுகாக்க வேண்டும்

Published On 2022-09-04 13:28 IST   |   Update On 2022-09-04 13:28:00 IST
  • சரவணன் எம்.எல்.ஏ. பேச்சு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

இதில் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மோட்டூர் அருணகிரிமங்கலம் ஆகிய 2 பஞ்சாயத்துகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கலசப்பாக்கம் யூனியனில் முதற்கட்டமாக 23 பஞ்சாயத்துகளில் 9 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று முதல் நடப்படுகிறது.

இக்கன்றுகளை நமது யூனியனில் செயல்படும் கடலாடி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் காட்டாபூண்டி நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் சனானந்தல் நர்சரியில் 3 ஆயிரம் மரக்கன்றுகளும் என 9 ஆயிரம் மரக்கன்றுகள் வேப்பம், கொங்கு, மா போன்ற 27 வகையான மரக்கன்றுகள் கொள்முதல் செய்து 100 நாள் பணியாளர்களை வைத்து நடப்படுகிறது.

மரக்கன்று நடுவது பெரிய விஷயம் அல்ல இதனை பாதுகாப்பது தான் மிகவும் அவசியம் மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வையுங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 15 வருடங்கள் கழித்து அது பலன் தரும் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது.

இதனை தடுக்கும் வகையில் மரக்கன்று நடும் திட்டம் நல்ல திட்டமாகும் மேலும் மீதமுள்ள 22 பஞ்சாயத்துகளுக்கு கூடிய விரைவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் யூனியன் கவுன்சிலர் கலையரசிதுறை பீடிஓக்கள் பாண்டியன் கோவிந்தராஜுலு பஞ் தலைவர்கள் வித்யாபிரசன்னா முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே போல் துரிஞ்சாபுரம் யூனியனில் சேர்மன் தமயந்தி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட பஞ் துணைத் தலைவர் பாரதிராமஜெயம் பீடிஓ லட்சுமி இன்ஜினியர் அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News