உள்ளூர் செய்திகள்

ஆரணி பெரியார் நகரில் வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளம்.

ஆரணியில் பலத்த மழை

Published On 2022-08-23 16:08 IST   |   Update On 2022-08-23 16:08:00 IST
  • வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது
  • கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அவதி

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பெரியார் நகர் ஆரணி பாளையம் கொசப்பாளையம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

இதில் பெரியார் நகர் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீட்டு உபயோக பொருட்களான டிவி பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக சாதனங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

வீட்டுக்குள் வெள்ளம்

மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவு நீரும் கலந்ததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவதி குள்ளாயினர்.

ஆரணி டவுன் பகுதியில் சுமார் 1 மணி நேரம் தொடர் மழை காரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இனிவரும் காலங்கள் மழைகாலம் என்பதால் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாய் அடைப்புகளை சரி செய்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் செல்லாமல் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News