ஆரணியில் தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்
- சிலை வடிவமைப்பாளர்கள் கோரிக்கை
- 10 சதவீதம் முதல் 20 சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளது
ஆரணி:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோன காலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கபட்டது.
தற்போது 2ஆண்டுகள் கழித்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் முள்ளிபட்டு கண்ணமங்கலம் ஓண்ணுபுரம் கொளத்துர் குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலை வடிவமைப்பாளர் தொழிலை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதித்தன.
தற்போது கொரோனா தடை தளர்வு செய்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாட உள்ளனர்.தமிழக மட்டுமட்டுமின்றி ஆந்திரா கர்நாடக மும்பை கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் பண்டிகை கொண்டாடுவார்கள்.
விநாயகர் சிலை வடிவமைப்பாளர் கோரிக்கை.
சிலை வடிவமைப்பு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிலை விற்பனை அமோக நடைபெறும் என்றும் நம்பி விநாயகர் சிலையை செய்து வருகின்றோம்.
விநாயகர் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கிய தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் எங்களிடம் விநாயகர் சிலை 15 அடி 20அடி சிலைகள் செய்ய பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆர்டர் வழங்கி வருகின்றனர்.
விநாயகர் சிலை செய்ய களிமண் உள்ளிட்ட மூலபொருட்கள் விலை தற்போது உயர்ந்துள்ளதால் சிலைகள் விலை தற்போது 10 சதவீதம் முதல் 20சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளன.
உடனடியாக தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் சிலை வடிவமைப்பாளர் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளதால் சிலை வடிவமைப்பாளர்கள் நலவாரியம் அமைத்து வாழ்வதாரம் மேம்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று சிலை வடிவமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.