உள்ளூர் செய்திகள்

செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. இலவச சைக்கிளை வழங்கிய போது எடுத்த படம்.

441 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

Published On 2022-09-13 15:07 IST   |   Update On 2022-09-13 15:07:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • 6 அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தை சேர்ந்த செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, ஆக்கூர், உக்கல் ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News