உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் பணம் பறிப்பு

Published On 2022-08-06 08:45 GMT   |   Update On 2022-08-06 08:45 GMT
  • போலீஸ் எனக்கூறி மோசடி
  • டிரைவர் கைது

ஆரணி:

ஆரணி அடுத்த அடையபுலம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவர் வெட்டியான் தொழுவம் காப்பு காட்டில் சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், என்பவர் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி விஸ்வநாதனை மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்து சென்றார்.

பின்னர் இது குறித்து விஸ்வநாதன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

Tags:    

Similar News