வரி இனங்கள் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
- சொத்துவரி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்
- செயல் அலுவலர் தகவல்
செங்கம்:
செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. மேலும் செங்கம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டடங்கள் உள்ளது.
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் சொத்து வரி செலுத்தாத உரிமையா ளர்கள் சொத்து வரி செலுத்த பேரூராட்சி சார்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை உள்பட வரி இனங்களை செலுத்தாத வர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் வரி இனங்களை செலுத்தி பேரூராட்சியில் இருந்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வரி செலுத்தாதவர்கள் சொத்துக்கள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று செங்கம் பகுதியில் வரி இனங்கள் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் மேற்பார்வையில் ஊழியர்கள் துண்டித்தனர்.