உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-14 14:07 IST   |   Update On 2023-03-14 14:07:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் பாரி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முறையீடுகளின் போது நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள் மற்றும் சிறப்பு நிலை தேர்வு நிலை அரசாணை வழங்க வேண்டும்.

மேலும் கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊழிய மாற்ற அரசாணை வெளியிட வேண்டும். 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்குவதாக ஒப்புக்கொண்ட உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர் பதவி உயர்வு ஆணைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News