உள்ளூர் செய்திகள்

கார் மீது பஸ் மோதி பெண் பலி

Published On 2023-05-10 14:57 IST   |   Update On 2023-05-10 14:57:00 IST
  • 4 பேர் காயம்
  • போலீசார் விசாரணை

கலசபாக்கம்,

தெலுங்கானா மாநிலம் கசாப் காலி நிஜாம்மாபாத் பகுதியை சேர்ந்தவர் மாரா குருஷி கிருஷ்ணா (வயது 34). இவர், தனது தாய் மாறா பாத்திமா மற்றும் மனைவி, மகன் உள்பட 5 பேர் காரில் திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினர். திரு வண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் போளூர் வழியாக காரில் சென்றனர்.

கலசபாக்கத்தை அடுத்த குருவிமலை பகுதி அருகே சென்ற போது, வேலூரில் இருந்து வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் மாறா பாத்திமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News