உள்ளூர் செய்திகள்

ஓட்டல் காவலாளி வீட்டில் திருட்டு

Published On 2022-08-16 14:32 IST   |   Update On 2022-08-16 14:32:00 IST
  • 15 பவுன் நகையை அள்ளிசென்றனர்
  • கதவை உடைத்து துணிகரம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வானவில் நகர் 4-வது தெருவை சேர்ந்த வர் கண்ணன் (வயது 52). இவர் தனியார் ஓட்டலில் காவலா ளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக் கப்பட்டிருந்த 15 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News