உள்ளூர் செய்திகள்

பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் காளைவிடும் திருவிழா

Published On 2023-05-12 12:23 IST   |   Update On 2023-05-12 12:23:00 IST
  • 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன
  • 55 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் 27 ஆண்டு களுக்கு பின்னர் காளைவிடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில் ஏராளமான இளைஞர்கள் கலந் கொண்டு ஆரவாரம் செய்தனர்.

இதில் வேகமாக ஓடி முதல், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற காளைகளுக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் உள்பட 55 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News