உள்ளூர் செய்திகள்

இசைப்பள்ளியில் சேர விண்ணப்பம்

Published On 2022-08-17 14:48 IST   |   Update On 2022-08-17 14:48:00 IST
  • மாணவர்கள் அரசினர் விடுதியில் தங்க ஏற்பாடு
  • கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது

திருவண்ணாமலை:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என 7 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

12 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கை பெற குறைந்த பட்சம் 7 ஆம் வகுப்பு நேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் நாதஸ்வரம், தவீல், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது ஆண்டுக்கு ரூ.350 பயிற்சிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

மாதா மாதம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை ரூ.400 வீதம் வழங்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயணச் சலுகை பெறலாம். 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும். தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கிப் பயிலல் வழிவகை செய்து கொடுக்கப்படும்.

Tags:    

Similar News