உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருகே கொதிக்கும் நெய் சட்டியில் கையால் வடை எடுத்த பெண் பக்தர்

Published On 2022-08-17 14:50 IST   |   Update On 2022-08-17 14:50:00 IST
  • 48 நாட்கள் தொடர்ந்து விரதம்
  • ஏராளமானோர் தரிசனம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் திருக்கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நேற்று சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் சின்ன கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சந்தி அம்மாள் என்ற பெண்மணி கடந்த 48 நாட்களாக தொடர்ந்து விரதம் இருந்து வந்தார்.

அவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிப்பட்டனர்.

Tags:    

Similar News