உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

Published On 2022-12-18 09:00 GMT   |   Update On 2022-12-18 09:00 GMT
  • 2 கிலோ பறிமுதல்
  • வாகன தணிக்கையின் போது சிக்கினர்

போளூர்:

போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருணாநிதி, மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் வசூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பதிவு எண் இல்லாத கார் அதிவேகமாக சென்றது. அந்தக் காரை போலீசார் பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்தனர்.

காரில் சோதனை செய்ததில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் (மதிப்பு ரூபாய் 20000) பறிமுதல் செய்தனர்.

காரில் பயணம் செய்த போளூர் அல்லி நகரைச் சேர்ந்த பாலகுமாரன் (32) போளூர் மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ் (38) போளூர் வேங்கடத்தான் தெருவில் வசிக்கும் குமரேசன் (32) திருப்பத்தூர் அருகே பொம்மி குப்பம் சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி ஓடிய பொம்மி குப்பம் சேர்ந்த மாது மகன் வேலு என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News