உள்ளூர் செய்திகள்
- 100 கிராம் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி தலைமையில் தண் டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அகரம் பள்ளிப்பட்டு கிராமத்திற்கு அருகில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் மணிகண்டன் (வயது 21), சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் விஜய் (22) என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.