உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம் :
காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கே.சரவணன் தலைமை தாங்கினார்.
இதில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், சூரத் நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்தும், பா.ஜ.க., அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி, வடக்கு மாவட்ட துணை தலைவர் செல்வம் ராமசாமி உள்பட கட்சியின் மாவட்ட, நகர, வட்டார, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.