உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

போலீஸ்காரரை அவதூறாக பேசிய வாலிபர் கைது

Published On 2022-07-05 04:41 GMT   |   Update On 2022-07-05 04:41 GMT
  • அவினாசி - மங்கலம் ரோடு மேம்பாலம் அருகே போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்ததாக போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் புகார்,

அவினாசி :

அவினாசி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் வேல்முருகன்(வயது 38). இவர் நேற்று அவினாசி மங்கலம் ரோடு மேம்பாலம் அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே அவினாசி காந்திநகரை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ் (32) என்பவர் இரு சக்கர வாகனத்தில் குடிபோதையில் தாறுமாறாக வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வேல்முருகன், பிரகாசை நிற்க சொன்ன போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க வந்ததாக போலீஸ் நிலையத்தில்வேல்முருகன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார்வழக்குபதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News