உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்ட காட்சி.

மனவலிமையை ஊக்கப்படுத்துவதற்காக திருப்பூர் மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி

Published On 2023-04-01 06:36 GMT   |   Update On 2023-04-01 06:36 GMT
  • காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
  • யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

திருப்பூர் :

காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காவலர்க ளுக்கு சரியான உடற்பயிற்சி அல்லது மன வலிமையை ஊக்குப்படு த்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொ ள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்ற க்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படு த்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியில் மன வலிமையை ஊக்குப்ப டுத்தும் யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சி களும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளை யம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலைய காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News