உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி
- ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரது மகன் ஆறுமுகம் (வயது57) ,கூலித் தொழிலாளி. நேற்று இவர் அவரது உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மொபட்டில் சித்தம்பலம் - ஆலூத்து பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்தவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.