உள்ளூர் செய்திகள்

சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்.

கணியாம்பூண்டி அவினாசி சாலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீர்

Published On 2023-07-27 15:31 IST   |   Update On 2023-07-27 15:31:00 IST
  • தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.
  • கணியாம்பூண்டியில் குப்பை மற்றும் சாக்கடை சுத்தம் செய்வதில்லை

அவினாசி:

அவினாசி ஒன்றியம் கணியம்பூண்டியில் ஏராளமான தொழிற்சாலைகள்,வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. திருப்பூருக்கும் அவினாசிக்கும் மிக அருகில் இந்த கிராமம்அமைந்துள்ளதால் தினசரி போக்குவரத்து அதிகளவில் நடக்கிறது. அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இங்கிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் இருசக்கர வாகனத்திலும் பள்ளி வாகனங்களிலும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கணியாம்பூண்டி மாரியம்மன் கோவில் அருகில் மூன்று ரோடு சந்திப்பு உள்ளது. இந்த ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து மாதகணக்கில் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்கிறது.

இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தெரியாமல் அந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர். மேலும் கணியாம்பூண்டியில் குப்பை எடுப்பதில்லை. சாக்கடை சுத்தம் செய்வதில்லை, இதனால் குழந்தைகள் உள்ளிட்ட முதியோர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. பழுதான ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News