உள்ளூர் செய்திகள்

தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்த காட்சி.

வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

Published On 2023-04-09 10:11 GMT   |   Update On 2023-04-09 10:11 GMT
  • பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
  • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காங்கயம் :

 காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News