உடுமலை புத்தக திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி
- தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை :
உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் தளி ரோடு தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கான பொது அறிவு, தமிழ், ஆங்கில நாவல்கள், வண்ண கோலங்கள், மருத்துவம், திரைப்படம் என ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர்.
இந்நிலையில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கண்ணகி தலைமையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். பின் தேவையான புத்தகங்களை வாங்கினர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் செய்திருந்தார். தொடர்ந்து வலசுபாளையம் சக்தி பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடந்தது.