உள்ளூர் செய்திகள்

 வெண்கலப்பதக்கம் வென்ற தொழிலதிபர் கார்த்திக்தனபால்.

மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் தொழிலதிபர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

Published On 2022-08-03 06:20 GMT   |   Update On 2022-08-03 06:20 GMT
  • துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
  • 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்

மங்கலம் :

தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் , இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டம், இடுவாய் , திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக்தனபால் தனிநபர் -50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

Tags:    

Similar News